யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. 

இச் சுற்றி வளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார். மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version