மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்; சிறுமி உள்ளிட்ட மூவர் காயம்.!

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளியில் பயணித்த இரு இனந்தெரியாத நபர்கள் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 30 வயதுடைய தாய், 12 வயதுடைய மகள், 44 வயதுடைய மற்றொருவர் காயமடைந்த நிலையில், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இது வரை தெரியவரவில்லையென்றும், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொஸ்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version