BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது.!

மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின் கூட்டு நடவடிக்கையினால் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியொருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் புனாணை, ரிதிதென்ன பிரதேசத்தில் வைத்து போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வியாபாரி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து கல்குடாப் பிரதேசத்தில் விநியோகித்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் உணவு, தூக்கமின்றி குறித்த வியாபாரியைக் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரினருக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5,320 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 100 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts