BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

இரவு நேரத்தில் அத்துமீறி வீடு நுழைந்த பொலிஸ் அதிகாரி – நீதிமன்ற விளக்கமறியலில்!

அத்துமீறி வீடொன்றுக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அலுவலர் ஒருவர், நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யுவதி ஒருவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு வேளையில் அத்துமீறி நுழைந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் குறித்த யுவதியால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுதினம் திங்கட்கிழமை அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts