கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் இருந்த பெறுமதி மிக்க நாவல் மரங்கள் இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமான முறையில் வெட்டி கடத்திச் செல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி கிராமங்களிலும், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளில் இல்லாதவர்களின் காணிகளிலும் இரவு வேலைகளில் மரங்களை சட்டவிரோதமான முறையில் வெட்டி செல்கின்றனர்.
அத்துடன் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இறந்த கல்லறைகளை இரவு வேளைகளில் உறவினர்களின் எந்தவித அனுமதியும் இன்றி கல்லறைகள் உடைக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட போது இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம்பெறாத இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், இந்நிலை தொடருமாயின் இனிவரும் காலங்களில் பாரிய பெறுமதி மிக்க மரங்களை காண முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.