BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு; நால்வர் கைது.!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் பகிடிவதை சம்பவத்தால் தனது வீட்டில் உயிர் மாய்த்துக் கொண்டார்.

உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயது இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார்.

சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி சமனலவேவ பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களில் 20 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற சமனலவேவ பொலிஸ் நிலையம் 2 ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts