Home இலங்கை செய்திகள் உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி – குவியும் மக்கள் பாராட்டு!

உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி – குவியும் மக்கள் பாராட்டு!

4
0

நேற்றிரவு அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழிமறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது. இதன்போது சாவகச்சேரி பொலிஸார் வேகத்தடையை வீதியில் போட்டவேளை டிப்பரின் சக்கரங்கள் காற்றுப் போனது.

இந்நிலையில் டிப்பரை நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சாவகச்சேரி பொலிஸார் டிப்பரை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வரும் டிப்பர்களை மடக்கிப் பிடிப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமது உயிரையும் துச்சமாக மதித்து, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் சாவகச்சேரி பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here