BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபக்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால்  விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இநநிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன்,  அவரிடம் இருந்து க 35 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இன்றையதினம் சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts