BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளி உயிரிழப்பு.!

ராகம, படுவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு (3) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய கூட்டாளியான ‘அமி உப்புல்’ என்ற நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இருந்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts