நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று (01) சந்தேக நபரை கைது செய்தனர்.
இந்த போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.