Home இலங்கை செய்திகள் கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் – அதிர்ச்சியில் பொலிஸார்

கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் – அதிர்ச்சியில் பொலிஸார்

10
0

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட 83 வயதான பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொளப்பிட்டி பகுதியில் உள்ள மற்றொரு நபரின் சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றம் தொடர்பான விசாரணை 2021 ஆம் ஆண்டு மாளிகாகந்த நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, நீண்ட கால விசாரணையின் பின்னர், பத்தரமுல்லையில் உள்ள ஒரு முதியோர் இல்ல வளாகத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here