Home இந்திய செய்திகள் இந்தியாவுக்கான $21 மில்லியன் மானியத்தை நிறுத்திய அமெரிக்கா

இந்தியாவுக்கான $21 மில்லியன் மானியத்தை நிறுத்திய அமெரிக்கா

11
0

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 21 மில்லியன் டொலர் மானியத்தை இரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE) எடுத்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (18) ஆதரித்தார்.

இந்த முயற்சிக்கு அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவதை ட்ரம்ப் கேள்வி எழுப்பினார்.

இது இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் வெளிநாட்டு தலையீடு குறித்த விவாதத்தைத் தூண்டியது.

இது குறித்து புளோரிடாவில் அமைந்துள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் போது ட்ரம்ப்,

“நாம் ஏன் இந்தியாவுக்கு 21 மில்லியன் டொலர் கொடுக்கிறோம்? அவர்கள் நிறைய பணம் பெற்றுள்ளனர். நம்மைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் அவை ஒன்று; அவற்றின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு நுழைய முடியாது.

இந்தியா மற்றும் அவர்களின் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் வாக்காளர்களுக்கு 21 மில்லியன் டொலர் கொடுக்கிறேன்? இந்தியாவில்? இங்கே வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன? – என்றார்.

பில்லியனர் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) சனிக்கிழமை (15) “இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை” அதிகரிக்கும் நோக்கிலான USAID இன் $21 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யும் முடிவை அறிவித்தது.

DOGE ஆனது அமெரிக்க அரசாங்கம் முழுவதும் பணியாளர்களைக் குறைப்பதை மேற்பார்வையிடும் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான முயற்சிகளுக்குப் பொறுப்பான சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் முகவர் நிலையத்தை (USAID) மூடுவதாக மஸ்க் அறிவித்தார்.

பெப்ரவரி 7 அன்று USAID அதிகாரிகளின் கூற்றுப்படி, உலகளவில் அனைத்து USAID மனிதாபிமான வேலைகளும் நிறுத்தப்பட்டதாக ABC நியூஸ் தெரிவித்தது.

மஸ்க்கின் அறிவிப்புக்கு முன்பே அன்று USAID இன் இணையதளம் மூடப்பட்டது.

பின்னர், ட்ரம்பினால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதி ஒரு தற்காலிக தடை உத்தரவை முறைப்படி அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here