BREAKING

இலங்கை செய்திகள்

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கைது.!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

23 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் கவனித்து அவரைப் பிடிக்க முயன்றனர், ஆனால் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனெல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்றனர், ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

கடுகண்ணாவ மற்றும் பேராதெனிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவ அதிகாரிகள் சாலைத் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்த முடிந்தது.

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குறித்த இளைஞனின் மனநலம் குறித்து சோதனை செய்ய அனுமதி கோரவுள்ளனர், கண்டி பிரிவு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிடுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts