BREAKING

இலங்கை செய்திகள்

வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் (JCPSM) குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சுகாதார அமைச்சருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கல்வி வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என கல்வி வல்லுநர்கள் சங்கத்தினரும் குற்றாட்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts