Home இலங்கை செய்திகள் மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

11
0

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த 10 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here