BREAKING

இலங்கை செய்திகள்

முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது

முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றையதினம் (23.02.2025) மாலை குறித்த இடத்திற்கு சென்ற ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசன், தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைப்பில் உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் கசிப்பு கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு சட்டவிேரோத கசிப்பு உற்பத்திக்கான கோடா வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் 24வயதுடைய முத்தையங்கட்டு இடதுகரையை சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு பிணை வழங்கப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts