BREAKING

இலங்கை செய்திகள்

மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்

மூதூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (01) நடைபெற்ற இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடவிலிருந்து சேருவில பகுதிக்குள் உள்ள ஒரு கோவிலுக்குச் செல்லும் பயணத்தின்போது, யாத்ரீகர்களை ஏற்றிய பேருந்து இந்த விபத்துக்குள்ளாகியது.

காயமடைந்தவர்கள் தற்போது மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts